இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடலூரில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்த கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

News image
கடலூரில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
Updated On :1 டிசம்பர் 2020, 6:02 am

DIN

                   
கடலூர்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்த கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வட கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்கு சுமார் 900 கி.மீ தொலைவில் நிலவி வரும்  காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் உள்ளூர் புயல் முன்னறிவிப்பு கொடி எண் 3 இன்று காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று புயல் எச்சரிக்கை கொடி எண் 1 ஏற்றப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.