சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கொள்ளிடத்தில் கொட்டித்தீர்த்த 360 மி.மீ. மழை: பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்த மக்கள்

கொள்ளிடத்தில் புதன்கிழமை அதிகாலை முதல்  கொட்டித்தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட  வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

News image
Updated On :4 டிசம்பர் 2020, 4:33 am

DIN

சீர்காழி: கொள்ளிடத்தில் புதன்கிழமை அதிகாலை முதல்  கொட்டித்தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட  வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

Story image

புயல் காரணமாக சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 360 மி.மீட்டர், சீர்காழியில் அதிகபட்சமாக 21 மி.மீட்டர் மழை என மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Story image

இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வடரங்கம் ஊராட்சி வடரங்கம் ஊராட்சி காலனி தெருவில் இரவு பெய்த தொடர் கனமழையால் 50 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

சென்னியநல்லூர் கிராமம் காலனி தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.