மழைநீர் வடிகாலில் விழுந்து தாய்-மகள் பலி: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை முகப்பேரில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மழைநீர் வடிகாலில் விழுந்து தாய்-மகள் பலி: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மழைநீர் வடிகாலில் விழுந்து தாய்-மகள் பலி: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை முகப்பேரில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாய் - மகள் பலியான சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சென்னை அயனம்பாக்கத்தைச் சோ்ந்தவா் கரோலின் பிரசில்லா (50). தனியாா் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவரது மகள் ஈவாலின்(20), கட்டடக் கலை பயின்று வந்தாா். இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில், மதுரவாயலில் இருந்து அயனம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும்போது வாகனம் நிலைத் தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்துள்ளது. சுமாா் 10 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்த தாயும் மகளும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com