தமிழ்நாடு
திருவாரூர் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
மழை சேத நிலவரங்களை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொக்கலாடி பகுதியில் பயிர் சேதங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து சாய்ராம் முகாம், கச்சனம் தென்னவராயன் நல்லூர் பகுதிகளில் பார்வையிட்டு விவசாயிகளையும் சந்திக்க உள்ளார்.