முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கரோனா தொற்று

நீதிபதிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

நீதிபதி கர்ணன்

Updated On :9 டிசம்பர் 2020, 6:01 am

நீதிபதிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகளையும், நீதித்துறை ஊழியர்களையும் அவதூறாகப் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்த்தில் தொடரப்பட்ட வழக்கில், 'முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?' என்று நீதிமன்றம் கேட்கவே சென்னை ஆவடியில் கடந்த 2 ஆம் தேதி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் கர்ணன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து சிறையில் இருந்த கர்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் 12 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அவரது உடலை கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.