சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழக-கேரள எல்லையில் 25 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லை குமுளியில் சாலையோரத்தில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வைத்திருந்த கடைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.

News image
தமிழக-கேரள எல்லையில் 25 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Updated On :9 டிசம்பர் 2020, 11:32 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லை குமுளியில் சாலையோரத்தில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வைத்திருந்த கடைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ளது குமுளி கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள குமுளி சாலையின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டிருந்தது. 

YouTube video thumbnail

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் புதிய தார் சாலை அமைப்பதற்காக கடைகளை அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதன் பின்னர் குமுளி காவல் நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அகற்றி விடுவதாக கூறினார்.

புதன்கிழமை கடைகளை அகற்ற குமுளிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினர் வந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பு கடைகளின் உரிமையாளர்கள், 25 ஆண்டு காலமாக கடைகளை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் மாற்று இடம் வேண்டும் என்று கோரி முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில் ஜேசிபி வாகனங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அகற்ற தொடங்கினர்.

அப்போது இயந்திரத்தை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை பிடித்து தொங்கிக்கொண்டு கடைகளை அகற்றக் கூடாது என்று போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், குமுளி காவல் ஆய்வாளர் முத்துமணி மற்றும் காவலர்கள் போராட்டம் செய்தவர்களை அகற்றினார்கள். அதன் பின்னர் கடைகள் அகற்றப்பட்டது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலரிடம் கேட்டபோது, தமிழக-கேரள எல்லையில் மத்திய அரசு அலுவலர் ஒருவர் வரும்போது எல்லைப் பகுதி மிகவும் மோசமாக இருப்பதை பார்த்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

கடந்த 25 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.