ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சேலம் அருகே திடீர் திடீரென கால்நடைகள் உயிரிழப்பு: விவசாயிகள் வேதனை

கால்நடைகளுக்கு வேகமாக பரவும் கழிச்சல் நோய் மற்றும் பெரியம்மை நோய் பரவி வருவதால் திடீர் திடீரென கால்நடைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

News image

கால்நடை மருத்துவமனை

Updated On :10 டிசம்பர் 2020, 5:10 am

DIN


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடைகளுக்கு வேகமாக பரவும் கழிச்சல் நோய் மற்றும் பெரியம்மை நோய் பரவி வருவதால் திடீர் திடீரென கால்நடைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பசு மாடுகளுக்கு பெரியம்மை நோய் மற்றும் கழிச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆடுகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில விவசாயிகளின் பசு மாடுகள் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி, சரிவர உணவு உள்கொள்ளாமல் சத்துக் குறைபாடுடன்,உயிரிழந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. 

விவசாயத்திற்கு முதுகெலும்பாக கருதப்படும் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் இதுபோன்ற மழை காலங்களில் திடீர் திடீரென இறந்து விடுவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

கால்நடைகள் மூலமாக வரும் வருமானத்தை வைத்துதான் விவசாயம் செய்து வருவதாகவும், அந்த விவசாயமும் தற்சமயம் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு விட்டதால், இந்த வருடம் தங்களுக்கு பெருத்த நஷ்டம் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். 

இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்ய போனால், மழை வெள்ளத்தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களது இறந்த கால்நடைகளை புதைத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

ஆகவே, தமிழக அரசு உயிரிழப்பு ஏற்படும் அனைத்து விதமான கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.