சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வருமானவரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

News image
வருமானவரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:05 pm

DIN

வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப் பதிவு செய்தது செல்லாது எனறு கூறி, வழக்கிலிருந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை விடுவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

தங்களது வருமானத்தில் ரூ.7.37கோடியை கணக்கில் காட்டவில்லை என கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கடந்த 2018-ல் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. 

சென்னைக்கு அருகே தங்களுக்கு சொந்தமான சொத்தை 2015-ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை குறைத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக, கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகள் முடியும் முன்னரே வழக்குத் தொடர்ந்தது செல்லாது என்று கூறி, வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.