தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரத்ன அங்கி சேவைக் காட்சி

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் தாததேசிகன் சாற்றுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை உற்சவர் தேவராஜப் பெருமாள் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

News image

லெட்சுமி,சரஸ்வதி தேவியருடன் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் தேவராஜசுவாமி. 

Updated On :13 டிசம்பர் 2020, 11:17 am

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் தாததேசிகன் சாற்றுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை உற்சவர் தேவராஜப் பெருமாள் ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அத்திவரதருக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தாததேசிகன் சாற்றுமுறை திருநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தாததேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவர் தேவராஜப் பெருமாள் திருக்கோயிலின் திருமலையிலிருந்து பெருந்தேவித் தாயார் சந்திதிக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவர் தேவராஜ சுவாமிக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

திருக்கோயில் வளாகத்தில் ரத்ன அங்கி அணிந்து உலா வந்த உற்சவர் தேவராஜ சுவாமி மற்றும் பெருந்தேவித் தாயார்.

திருக்கோயில் வளாகத்தில் ரத்ன அங்கி அணிந்து உலா வந்த உற்சவர் தேவராஜ சுவாமி மற்றும் பெருந்தேவித் தாயார்.

இதனைத் தொடர்ந்து தாததேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி மரியாதை செய்விக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து லெட்சுமி, சரஸ்வதி தேவியரோடு உற்சவர் தேவராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் ரத்ன அங்கி அணிந்து தனித்தனியாக கேடயத்தில் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் உற்சவர் தேவராஜசுவாமி திருமலைக்கும், பெருந்தேவித் தாயார் அவரது சந்நிதிக்கும் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.