மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் அறுவடைப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

News image
சின்னமனூரில் நெற்பயிர்களை அறுவடை செய்யும் இயந்திரம்
Updated On :13 டிசம்பர் 2020, 9:34 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு பாசன நீரால் செப்டம்பர் மாதம் முதல் போக நெற்பயிர் சாகுபடிப் பணிகள் நடைபெற்றன. சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, குச்சனூர் போன்ற பகுதியில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவிற்கு நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 120 நாள்கள் தொடர் பராமரிப்பைத் தொடர்ந்து தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறத் துவங்கியுள்ளது.

விளைச்சல் அமோகம்: பருவமழை கை கொடுத்ததாலும், முல்லைப் பெரியாற்றிலிருந்து தடையின்றி பாசன நீர் கிடைத்ததாலும், அதோடு கடந்தாண்டியில் ஏற்பட்ட புகையான் நோய் தாக்குதல் இன்றி விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளது. மேலும், வழக்கமாக ஏக்கருக்கு 45 மூடைகள் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு 50 மூடைகள் வரையில்  கூடுதலாக விளைச்சல் கிடைத்து இருப்பதாக விவசாயிகள் கூறினர்.

குவிண்டால் ரூ.1,050க்கு விற்பனை: 61 கிலோ எடை கொண்ட 1 மூட்டை ரூ.1,050 வரையில்  விற்பனையாவதால், வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய குவிந்துள்ளனர். இதனால் சின்னமனூர் பகுதியில் நெல் அறுவடைப்பணியில் ஈடுபடும் இயந்திரங்கள், டிராக்டர்கள்,  கூலித்தொழிலாளர், கொள்முதல் செய்யும் சரக்கு வாகனங்கள் என அப்பகுதி திருவிழாபோல் காட்சியளிக்கிறது. தற்பாது விவசாயிகள் மிக ஆர்வத்துடன் முதல் போக நெற்பயிரை அறுவடைப்பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.