நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு நாளை(டிச.15) முதல் அனுமதி வழங்கப் படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

News image

குற்றாலம் ஐந்தருவி

Updated On :14 டிசம்பர் 2020, 10:19 am

DIN

குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு நாளை(டிச.15) முதல் அனுமதி வழங்கப் படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது கரோனா பரவல் குறைந்த நிலையில் சுற்றுலாத்தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாகவும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளில் குளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சுற்றுலாப் பயணிகள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.