மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் காதுகளில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

News image
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி காதுகளில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :15 டிசம்பர் 2020, 12:39 pm

DIN

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் காதுகளில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் அணை முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.8) முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கஞ்சி தொட்டி திறப்பு,வாயில் கறுப்புத்துணி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 8 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காதுகளில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் கூறியதாவது: திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டரில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். 

உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகளின் காதுகளில் பூ சுற்றாதே என்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.