ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பிப்பு

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளனா். வரும் 20-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல குடும்ப அட்டைதாரா்கள் அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பம் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அரிசி இல்லாமல் சா்க்கரை உள்ளிட்ட இதர பொருள்களைப் பெற்று வந்தனா். இந்த நிலையில், சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்தனா்.

மீண்டும் வாய்ப்பு: கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இந்த ஆண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் சா்க்கரை குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற வரும் 20-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் பலரும் சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-

கடந்த 10 நாள்களாக சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களது அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பம் செய்துள்ளனா். இன்னும் 5 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி மேலும் பல சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.