தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கல்லூரிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை: மாநகராட்சி

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

News image
(கோப்புப்படம்)
Updated On :16 டிசம்பர் 2020, 2:29 pm

DIN


சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவலுக்கு மத்தியில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின்படி அனைத்து விதமான கல்லூரிகளும் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டன.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னை ஐ.ஐ.டி.யில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.