மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரும்பாக்கம் புதிய காவல் நிலையம்: சென்னை காவல் ஆணையர் திறந்து வைத்தார்

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார்.

News image
பெரும்பாக்கம் புதிய காவல் நிலையம்: காவல் ஆணையர் திறந்து வைத்தார்
Updated On :17 டிசம்பர் 2020, 9:54 am

DIN

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார்.

பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்குக் குடியிருப்பு வளாகத்தில் இந்த புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காவல்நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாழ்த்தினார். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.

இப்புதிய காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித் குமாரின் செல்லிடப்பேசி எண்களான 9840619597 மற்றும் 9498143067 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.