சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2020, 12:53 pm

DIN

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் மாற்றுத் திறனாளி சரண்யா. அலுவகத்தில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தி வந்திருக்கிறார். 
இவர், கடந்த 5ஆம் தேதி இயற்கை உபாதை காரணமாக அருகில் வசிக்கும் வீட்டிற்கு சென்றபோது கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த 8 அடி செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இதுதொடர்பாக தலைமைச்செயலர் விரிவான அறிக்கையை 6 வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.