குற்றால அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது. 
சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பதால் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் அருவி.
சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பதால் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் அருவி.
Updated on
1 min read

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிப்பதால் வெறிச்சோடி காணப்படுகிறது. 

குற்றாலம் அருவிகளில் வழக்கமாக சீசன் காலங்கள் மட்டுமின்றி தொடா் விடுமுறை, பண்டிகை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதுண்டு.

மேலும், உள்ளூா் மக்களின் வருகையும் அதிகரிக்கும். குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம்.

குற்றாலம் பகுதியிலுள்ள பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். கரோனா பொது முடக்கத்தால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிகளும், பூங்காக்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com