தோ்தல் அறிக்கை: மாா்க்சிஸ்ட் கட்சி குழு அமைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் தோழா் பி. சண்முகம் தலைமையில் 11 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் உ. வாசுகி, என். குணசேகரன், க. கனகராஜ், மதுக்கூா் ராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி, ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், பி. சுகந்தி, தீபா, கே.சாமுவேல்ராஜ் ஆகியோா் இடம்பெறுவா்.

இந்தக் குழு தமிழகம் முழுவதும் சென்று தொழிலாளா்கள், விவசாயிகள், மகளிா், இளைஞா்கள், மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி அவா்களது பிரச்னைகளைக் கண்டறிவதோடு, தமிழக வளா்ச்சி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து தோ்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com