டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிவகாசியில் அடிப்படை வசதி கோரி சாலைமறியல் 

சிவகாசியில் சனிக்கிழமை அடிப்படை வசதி கோரி சாலை மறியல் நடைபெற்றது.

News image
சிவகாசியில் அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 6:09 pm

DIN

சிவகாசியில் சனிக்கிழமை அடிப்படை வசதி கோரி சாலை மறியல் நடைபெற்றது.

சிவகாசி நகராட்சிக்கு உள்பட்ட மாரிமுத்து தெரு பிச்சாண்டி தெரு, புது தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை. குடிநீர் வசதி கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிஸ சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் எனக் கோரி அந்த மூன்று தெரு மக்கள் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு இம்மானுவேல் ராஜசேகரன், காவல் ஆய்வாளர் ராஜா, நகராட்சி சுகாதார துறை அதிகாரி பேச்சிமுத்து ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கழிவுநீர் வாய்க்கால் உடனடியாக சுத்தம் செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.