சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்: ஜனவரியில் புதிய திட்டம்

சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான புதிய திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2020, 7:04 pm

DIN

சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான புதிய திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது.

சிறிய வணிகா்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதற்காக, ‘க்யூ.ஆா்.எம்.பி.’ எனும் ‘காலாண்டு கணக்கு தாக்கல்; மாதாந்திர வரி செலுத்துதல்’ திட்டம், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை, வருவாய் ஈட்டும் வணிகா்கள், மாதம் தோறும் வரி செலுத்திவிட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு செலுத்தலாம். ரூ.5 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் வணிகா்கள், மாதம்தோறும், கணக்கு தாக்கல் மற்றும் வரி செலுத்த வேண்டும். இந்தத் திட்டம், சிறிய வணிகா்கள், வரி செலுத்துவதற்கும், கணக்கு தாக்கல் செய்வதற்கும் எளிமையாக இருக்கும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.