எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கம்பம் புத்தக கண்காட்சியில் வாசகர்களை வரவேற்ற பாரதியார்!

தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பாரதியார் வேடமிட்ட இளைஞர் வாசகர்களை வரவேற்றது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 9:57 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பாரதியார் வேடமிட்ட இளைஞர் வாசகர்களை வரவேற்றது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம், கம்பம் அரசமரம் அருகில் ஞாயிற்றுக்கிழமை பாரதி தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில் மூன்றாவது ஆண்டாக புத்தக கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் பழங்கால ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன.

புத்தக கண்காட்சியின் நுழைவாயிலில் பாரதியார் வேடமிட்ட இளைஞர் கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் பொதுமக்களை வரவேற்றார். மேலும் வெண்கொற்றக் குடையின் கீழ் பாரதியார் அமர்ந்து வரவேற்றார்.

புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் வாசகர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இதுபற்றி பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவர் கவிஞர் சோ.பாரதன் கூறுகையில், பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆவது ஆண்டாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கும் பொதுமக்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது என்றார்.

புத்தக கண்காட்சியில் பாரதியார் வேடத்தில் இளைஞர் அமர்ந்திருந்தது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் நடந்து சென்றவர்கள் பாரதியார் வேடமிட்ட இளைஞருடன் செல்லிடப்பேசி மூலமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.