ஆரணி அருகே ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு: 5 ஊழியர்கள் கைது

ஆரணி அருகே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணி அருகே நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு: 5 ஊழியர்கள் கைது
ஆரணி அருகே நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு: 5 ஊழியர்கள் கைது
Updated on
1 min read

ஆரணி அருகே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள செல்போன் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்  ஆரணி அடுத்த துரைநல்லூர் கிராமத்தில் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் இயங்கி வருகிறது. எலக்ட்ரானிக் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 12 உயர் ரக செல்போன், 37 புளூடூத், 6 கைக்கடிகாரம் உள்ளிட்ட 5.5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போயுள்ளதாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் தினேஷ், பவித்ரன், கிஷோர், கௌதம், காவியா ஆகிய 5 ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 4 ஆண்களையும் திருத்தணி சிறைச்சாலைக்கும் காவியா என்ற பெண்ணை மட்டும் புழல் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com