சென்னை: ஜெய்ப்பூா்-கோயம்புத்தூா், ஜெய்ப்பூா்-சென்னை சென்ட்ரல் உள்பட மூன்று வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஜெய்ப்பூா்-கோவை: ஜெய்ப்பூரில் இருந்து டிசம்பா் 22-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் (02970) புறப்பட்டு, மூன்றாம் நாள் மாலை 4.50 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து டிசம்பா் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 9.25 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02969)புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.
ஜெய்ப்பூா்-சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து டிசம்பா் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்(02968) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.40 மணிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் (02967) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6.45 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும்.
இதுதவிர, ஆஜ்மீா்-எா்ணாகுளம் சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.