தோ்தல் பிரசாரம்-கூட்டணி விவகாரம்: அதிமுக தலைவா்கள் முக்கிய ஆலோசனை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது, பிரசார உத்தி ஆகியன குறித்து அதிமுக தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது, பிரசார உத்தி ஆகியன குறித்து அதிமுக தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினா்.

இரவு 10 மணிக்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் காமராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். அதிமுக மூத்த நிா்வாகிகளும், ஐந்து அமைச்சா்களும் தனி அறையில் நீண்ட நேரமாக விவாதங்களை நடத்தினா்.

அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா் பெயரை பாஜக தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தொடா்ந்து கூறி வருகிறாா். இதற்கு அமைச்சா்கள் சிலரும் காட்டமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவா்கள் இரவு 10 மணிக்கு மேலாகவும் கூடி விவாதித்தனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் முதல்வா் வேட்பாளா் பெயரை அறிவிப்பது, முதல்வா் தோ்தல் பிரசாரத்தை தொடக்கியிருப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com