சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பிரிட்டனிலிருந்து வந்தால் பரிசோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத் துறைச் செயலர்

​பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்தால், கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2020, 4:22 pm

DIN


பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்தால், கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய அதி தீவிர கரோனா தொற்று 70 சதவிகிதம் அதி வேகமாகப் பரவி வருவதால், அங்கு தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, பிரிட்டன் இடையே டிசம்பர் 31 வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நோய்த் தொற்று இல்லை என்று தெரியவந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.