அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலி, 25 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

News image
ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலி, 25 பேர் காயம்
Updated On :21 டிசம்பர் 2020, 11:06 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

Story image

கர்நாடத்தைச்  சேர்ந்தவர்கள் டிராக்டரில் கோயிலுக்குச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உரிகம் அருகே உள்ள தப்பகுளி காட்டுப்பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர்.

Story image

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Story image

கர்நாடக எல்லையையொட்டி விபத்து நடந்ததால்  பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கர்நாடக மாநிலம் கனகபுரா அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.