இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக சீதாராமன் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராகச் சோ்க்கிறது. வழக்குரைஞா் சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (டிசம்பா் 23) ஒத்திவைத்தனா்.