அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட நூலகம் அலுவலகம் எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அடையாள அட்டைகள் அணிந்து பணிக்கு வந்தனர். கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அனைவருக்கும் பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்குதல், ஜமாபந்தி சிறப்பு படி வழங்குதல், கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக பணிக்கு வந்த அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து வந்து பணிபுரிந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் கோரிக்கைகள் குறித்த அடையாள அட்டைகள் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.