சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்: எல்.முருகன் பேட்டி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

News image
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு போட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
Updated On :24 டிசம்பர் 2020, 9:34 am

DIN

மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து சென்னை சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக பாஜக சார்பில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் பலன்கள் விளக்கபட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக விவசாயிகளுக்கு  ரூ.2000 ஊக்கத்தொகை  நாளை முதல் வழங்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் திமுகவின் போராட்டம் வெற்றி அடைய வில்லை. திமுக ஆட்சியில் போது  42-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. மேலும் திமுகவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு அவர்களது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமாக விளை பொருள்களை எந்த பகுதியிலும் விற்பனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர். இன்று அதே சட்டத்தை வேறுவிதமாகப் பேசி வருகின்றனர்.

பாதிரியார் எஸ்ரா. சற்குணம் இறைவனுக்கு தோன்றாமல் திமுக கூட்டங்களில் பங்கேற்று பிரதமரை உரிமையில் பேசுவதை கண்டிக்கிறோம் .

அதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். தமிழக அரசு பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடும் வகையில் ரூ.2500 அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று முருகன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.