வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயி கைது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே அருள்வாடியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.

News image
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு
Updated On :24 டிசம்பர் 2020, 10:23 am

DIN

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே அருள்வாடியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி யானையைக் கொன்ற வழக்கில் தலைமறைவான தோட்டத்து உரிமையாளர் காளையாவை இன்று வனத்துறையினர் கைது செய்தனர்.  

சத்தியமங்கலம் அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வந்தன. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட யானைகள் காட்டுக்குள் துரத்துகின்றனர். 

Story image

இந்நிலையில் கடந்த 19ம் தேதி வனத்திலிருந்து வெளியேறிய 20 வயதுள்ள ஆண்யானை அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த காளையா  45, தனது தோட்டத்தில் ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். வனவிலங்குகள் பயிரைச் சேதப்படுத்துவதால் பயிர்களைப் பாதுகாக்க மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தோட்டத்து வேலியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார். 

அங்கு வந்த யானை ராகி தோட்டத்துக்குள் புகும்போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சி யானையைக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த காளையாவை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் பதுங்கியிருந்த காளையாவை 4 நாள்களுக்கு பிறகு ஜீரஹள்ளி வனத்துறையினர் இன்று கைது செய்து ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.