வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியாவின் விவகாரங்களில் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது: காங்கிரஸ்

இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட மத்திய அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image
பிரதமர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப்- கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 11:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட மத்திய அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மாநிலங்களவையில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பணிகள் குறித்த விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோஹில் பேசுகையில், "அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மத்திய அரசு அடிபணிந்து வருகிறது. எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட நாட்டின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளின் நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். டிரம்ப் கூறுவது பொய் என்று அவையில் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், உங்களால் அதைச் செய்ய முடியாது.

எங்கிருந்து எண்ணெய் வாங்குவது - ரஷியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ. அது நம் விருப்பம்; நம் நாடுதான் தீர்மானிக்கும்.

மேற்கு ஆசியாவில் போர் காரணமாக, இந்தியர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள்தான் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி ஆட்சியமைந்த பிறகுதான் இந்தியா மீதான மரியாதை உலகளவில் உயர்ந்துள்ளதாக பாஜக உறுப்பினர் சங்கீதா பல்வந்த் கூறினார்.

சங்கீதா பல்வந்த் கருத்துக்கு பதிலளிக்கையில், "உலகளவில் இந்தியாவின் மரியாதை எப்படி உயர்ந்துள்ளது?அப்படியென்றால், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்குகளால் கட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை என் நாட்டு மக்களும் எனது அரசும்தான் தீர்மானிக்கும் என்று முன்னாள் பிரதமர் (இந்திரா காந்தி) சொன்னார். அப்போதுதான், இந்தியாவின் மரியாதை உலகளவில் உயர்ந்தது" என்று கோஹில் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.