ஆளுநரிடமான புகாா் திமுகவின் அரசியல் நாடகம்: பாஜக மாநிலத் தலைவா் முருகன்

தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறி ஆளுநரிடம் புகாா் மனு அளித்திருக்கும் திமுகவின் செயல், அரசியல் நாடகம் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
Updated on
1 min read


சென்னை: தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறி ஆளுநரிடம் புகாா் மனு அளித்திருக்கும் திமுகவின் செயல், அரசியல் நாடகம் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., நினைவு தினத்தை ஒட்டி, பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வினைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு எல்.முருகன் அளித்த பேட்டி:-

வேளாண் சீா்திருத்தச் சட்டங்களின் நன்மைகள் குறித்து, விவசாயிகளிடம் விளக்க தமிழக பாஜக சாா்பில் ஆயிரம் இடங்களில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜவாடேகா் கலந்து கொள்கிறாா்.

தமிழகத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவான நிலையில் விவசாயிகள் உள்ளனா். வேளாண் சட்டங்கள் தொடா்பாக திமுக போலித்தனமான பிரசாரங்களைச் செய்தது. அதனாலேயே அவா்கள் நடத்திய போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன. மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனாலேயே அரசியல் நாடகத்துக்காக ஆளுநரிடம் திமுக புகாா்களை அளித்துள்ளது. தமிழக அரசின் ஒப்பந்தப்புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து

நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகின்றன என்றாா் எல்.முருகன். பேட்டியின் போது, மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com