பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையைக் கண்டித்து போராட்டம்

ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையினர் அலட்சியத்தால் காட்டுயானை தாக்கி மீண்டும் ஒரு கூலித்தொழிலாளி பலியானதால் வனத்துறையைக் கண்டித்து மலைக்கிராமத்தினர்  பட்டினி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலைக்கிராம மக்கள்.
Updated On :24 டிசம்பர் 2020, 9:41 am

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையினர் அலட்சியத்தால் காட்டுயானை தாக்கி மீண்டும் ஒரு கூலித்தொழிலாளி பலியானதால் வனத்துறையைக் கண்டித்து பட்டினி போராட்டத்தை மலைக்கிராமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உள்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மணலார் எஸ்டேட் பகுதியில் வேலைக்கு சென்று திரும்பிய அம்மாவாசியை யானை மிதித்துக் கொன்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள்  குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையினர் எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில் அதே பகுதியிலேயே யானை உலாவி வந்துள்ளது.

இந்நிலையில் அதே யானை அருகேயுள்ள மேல் மணலார் கிராமத்தில் மற்றொரு கூலித்தொழிலாளி முத்தையா வை அவரது வீட்டு வாசலிலே கொன்றுவிட்டது. குடியிருப்பு பகுதிகளில் உலாவும் யானை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க பல முறை வலியுறுத்தியும், சின்னமனூர் வனத்துறையினர் அலட்சியமே 2 ஆவது உயிர்ப் பலிக்குக் காரணம் எனக் கூறி மணலார் மற்றும் மேல் மணலார் மலைக்கிராமத்தினர் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லாமல் பணிப்புறக்கனிப்பு செய்தும், வனத்துறையைக் கண்டித்து பட்டனிப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.