மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மினி கிளினிக் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

தமிழக அரசின் மினி கிளினிக்கை இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, கீழப்புலியூர் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
மினி கிளினிக் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
Updated On :24 டிசம்பர் 2020, 10:14 am

DIN

பெரம்பலூர் அருகே தங்களது கிராமத்துக்கு ஒதுக்கிய தமிழக அரசின் மினி கிளினிக்கை இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, கீழப்புலியூர் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 16 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கபட உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திலுள்ள தேனூர் கிராமத்தில் புதிதாக செயல்பட உள்ள மினி கிளினிக்கை  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வியாழக்கிழமை திறந்து வைத்தார். 

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு ஒதுக்கிய மினி கிளினிக்கை வேறு கிராமத்துக்கு இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, பெரம்பலூர் -எழுமூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மங்களமேடு காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, குன்னம் வட்டாட்சியர் மற்றும் வேப்பூர் வட்டார சுகாதாரத் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழப்புலியூர் கிராமத்தில் அம்மா கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.