செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகள்

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  
செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவில் ஸ்ரீ ரங்கநாதரும் உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி பூதேவி பெருமாளுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
செங்கல்பட்டு செங்கழுநீர் விநாயகர் கோவில் ஸ்ரீ ரங்கநாதரும் உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி பூதேவி பெருமாளுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.   

சொர்க்கவாசல் திறப்பையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. 

சொர்க்கவாசல் வழியாக அருள் பாலித்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com