திருமயம்: 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்புக்காக காலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிகளின்படி சொர்க்கவாசல் திறப்பும் சாமி புறப்பாடும் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பொதுமக்களும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.