சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிதம்பரத்தில் நியாயவிலைக்கடை கடை பணியாளர்கள், பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம்

தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலைக்கடைகளில் கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் நியாயவிலைக்கடைகளில் பயன்படுத்தும் ஓபிஎஸ் கருவிகளை திருப்பி ஓப்படைக்க வந்த பணியாளர்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 7:51 am

DIN

சிதம்பரம்: தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நியாயவிலைக்கடைகளில் கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ள கைரேகை மூலம் பொருள்களை வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக செயல்படாததாலும், சரியான இணையதள வேகம் இல்லாததால் பொருள்கள் வழங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் அக்கருவியை திருப்பி வழங்கும் போராட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாநிலை துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்ட நிர்வாகிகள் நடராஜ், நரசிம்மன், நகர நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, கனகசபை, யோகராஜ், சிவராஜன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நியாவிலைக்கடை பிஓஎஸ் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருப்பி வழங்க சென்றனர். ஆனால் அதிகாரிகள் வாங்க மறுத்தததால், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.