மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம் என பாஜக கூறுமா?: சு. திருநாவுக்கரசர்

எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நாங்கள் தான் அறிவிப்போம் என பாஜக கூறுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் எம்பி கேள்வி எழுப்பினார்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:56 am

DIN

எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நாங்கள் தான் அறிவிப்போம் என பாஜக கூறுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் எம்பி கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழாவில் காந்தி பூங்காவிலுள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் அறிவிக்கும் என்று அக்கட்சியினர் கூறுவது சர்வாதிகாரம்; அராஜகம்.

தன்மானம் உள்ள தலைவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள். எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ உயிரோடு இருந்தால் இப்படிக் கூறுவார்களா?

திருவள்ளுவர் சாதி, மதங்களுக்கு அப்பார்ப்பட்டவர். உலகப் பொதுமறையைத் தந்தவர். அவரது படத்துக்கும் சிலைக்கும் காவி வண்ணம் அடிப்பது அநாகரீகமானது.

திமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முயற்சிப்பது தவறு. அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் கிராம சபைக் கூட்டங்களை அதிமுக நடத்தித் தேர்தலைச் சந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார் திருநாவுக்கரசர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.