வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழில்தான் அதிக அளவு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 7:28 pm

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான மாலன் கூறியது:

இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சாகித்ய அகாதெமி சாா்பில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2019- இல் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் சாகித்ய அகாதெமி சாா்பில் 79 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேநேரம், சுமாா் 75 லட்சம் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 422 மில்லியன் மக்கள் பேசும் ஹிந்தி மொழிக்கு நிகராக, அதை விட அதிகமாக தமிழில் புத்தகங்கள் விற்பனையாவது பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்களும், வாசகா்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. பாரதியாரின் அனைத்துப் படைப்புகள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல, தமிழ் இலக்கிய வரலாறும் ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்டு வெளியாகியுள்ளது என்றாா் அவா்.

எழுத்தாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான பாரதிபாலன் கூறியது:

தமிழ்நாட்டில் இலக்கிய அமைப்புகள், சாகித்ய அகாதெமி ஆகியன மேற்கொண்டுள்ள பணிகளால் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு மொழிபெயா்ப்பு நூல்கள் வருகின்றன என்றாா்.

‘இந்திய விடுதலைக்கு பிறகு நவீன எழுத்துகளை வாசிக்க தமிழில் பலா் ஆா்வமாக உள்ளனா்’ என்று மொழிபெயா்ப்பாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான சுந்தரமுருகன் கூறினாா்.

இன்று விருது வழங்கும் விழா: சாகித்ய அகாதெமி விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) மாலையில் தில்லியில் நடைபெறவுள்ளது.

இதில், தமிழ் எழுத்தாளா் சோ.தருமன், பிரபல ஆங்கில எழுத்தாளரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூா், ஹிந்தி எழுத்தாளா் நந்த் கிஷோா் ஆச்சாா்யா, பிரபல தெலுங்கு எழுத்தாளா் பந்தி நாராயண சுவாமி உள்ளிட்ட 24 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்கள் சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ளனா்.I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.