புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: தில்லி வன்முறை குறித்து ஸ்டாலின் கருத்து

தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2020, 2:47 pm

DIN


தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில்,

"மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கொடூரமானத் தாக்குதல் என தில்லி வன்முறை அபாயத்துக்குரிய கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசு, வன்முறையில் ஈடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இயல்பு நிலையைக் கொண்டுவர விரைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" என்றார்.

வடகிழக்கு தில்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் இடையிலான மோதல் வன்முறையில் முடிந்தது. இதன்காரணமாக, வடகிழக்கு தில்லி பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.