குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல்லில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி பிரதான சாலை பெரியார் சிலை காமராஜர் சிலை பூ மார்க்கெட் எம்ஜிஆர் சிலை பேருந்து நிலையம் தலைமை தபால் அலுவலகம் வழியாக திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் தலைமையில் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சி சி ஏ வேண்டும் என கோஷமிட்டனர்.