இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றம்

தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர். 
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றம்
Updated on
1 min read

தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர். 

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பள்ளிவாசல்களில் அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம், சாவடி, புதுநகர், முதுநகர் என பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை  அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடிக்கு மரியாதை  செலுத்திய நிகழ்வு மத நல்லிணக்கம் மட்டுமின்றி தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com