சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெறும்: இந்து முன்னணி அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

News image
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

திருப்பூர்: தமிழகத்தில் கரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்து முன்னணி தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவடைகின்றன. இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதிலும் கடந்த 32 ஆண்டுகளாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் ஒரு சிலையுடன் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனால் தொடங்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதிலும் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று மக்களை அச்சுறுத்தி வருவதால் கடந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள அதே பகுதிகளில் மிக எளிமையாக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளது. அதே வேளையில், எந்தவிதமான ஆடம்பரம், ஊர்வலம், நன்கொடை வசூல் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

மேலும், அந்தந்த கிளை கமிட்டிகளின் சொந்த செலவுகளில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். இதன் பிறகு மாலை 6 மணி அளவில் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் பிள்ளையாருக்கு தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தி, அதை விசர்ஜனம் செய்து வீட்டு வாசல்களில் தெளிக்க வேண்டும். தமிழகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 1.5 லட்சம் சிலைகள் வைக்கப்படும் என்றார்.

இந்த சந்திப்பின்போது மாநிலச் செயலாளர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார்,வி.எஸ். செந்தில்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.