ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்.எல்.சி. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி கோரிக்கை

என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :2 ஜூலை 2020, 11:07 am

DIN

என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.  

தொடர்ந்து, நெய்வேலி விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனக் கூறியதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். 

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவிடம் பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்றைய தினம் (1.7.2020) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி. விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன்.

மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.