சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூவரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, ஸ்ரீதர் உள்பட மூன்று பேரையும் ஜூலை 16-ஆம் தேதி வரை தூத்துக்குடி பேரூரணி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.