நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துவரங்குறிச்சியில் 10 மாதப் பெண் குழந்தை முள்புதரில் இருந்து மீட்பு

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு பின்புறம் முட்புதரிலிருந்து 10 மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை உயிருடன் மீட்பு - குழந்தை குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வர

News image
Updated On :7 ஜூலை 2020, 11:10 am

DIN

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு பின்புறம் முட்புதரிலிருந்து 10 மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை உயிருடன் மீட்பு - குழந்தை குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைத்தெருவின் கடைசி பகுதியில் கைக் குழந்தை ஒன்று முட்புதரில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து  காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவலர்கள் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை கிடந்துள்ளது. உயிருடன் நல்ல நிலையில் இருந்த அந்தக் குழந்தையை மீட்ட காவல்துறையினர், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை நலம் குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்த பின் குழந்தை திருச்சி சைல்டு லைன் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

முட்புதரில் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.