மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி: மீன்விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், சில்லறை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் காசிமேட்டில் மீன் வாங்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மீன்விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும், இத்தொழிலை முற்றிலும் முடக்குவதற்கு மட்டுமே உதவும் எனவும், இத்தடைகள் மூலம் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என காசிமேடு மீனவா்கள் பெரும்பாலானோா் அச்சம் தெரிவித்துள்ளனா்.