தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி

இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி
Updated On :23 ஜூலை 2020, 8:04 am

DIN


இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து எம்.பி. ஜோதிமணி, தனது சுட்டுரைப் பக்கத்தில், ரஜினிகாந்த் அவர்களே, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%, இந்திய அளவில் 52%, அவர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவில் மண் அள்ளிப் போட்டிக்கிறது பிஜேபி அரசு.

அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, கந்த சஷ்டிக்கு எதிராக கருத்துப் பதிவு செய்தவர்களைக் கைது செய்து, கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் இருந்த விடியோக்கள் நீக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை நேற்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததாவது, கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவா்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட விடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமாா்ந்த பாராட்டுகள். இனிமேலாவது, மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்...ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்று ரஜினி கூறியிருந்தார்.

கந்த சஷ்டிக் கவசத்தை விமா்சித்து கறுப்பா் கூட்டத்தினா் விடியோ ஒன்று வெளியிட்டனா். அது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து ரஜினி கருத்துக் கூறியிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடு குறித்து எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.