தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தருமபுரி விவசாயி தற்கொலை விவகாரம்: உறவினர்கள் போராட்டம்

தருமபுரி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
இண்டூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
Updated On :28 ஜூலை 2020, 9:24 am

DIN

தருமபுரி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி அருகே உள்ள தீர்த்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா(45) .இவருக்கு மனைவி பெரியம்மா (43) இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இவரது சொந்த நிலத்தை இண்டூர் அருகேயுள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் ஏமாற்றி அபகரித்து கொண்டதாகவும், எனவே தன்னுடைய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார். இதில் நிலம் ஒப்படைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய நிலத்தை மீட்க முடியாததால் திங்கள்கிழமை தனது வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் இது தொடர்பாக ரத்தினம் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், விவசாயி ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தருமபுரி- பென்னாகரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.