மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு சீல் வைப்பு

காஞ்சிபுரம் திருக்கச்சி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

News image
விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Updated On :28 ஜூலை 2020, 8:20 am

DIN

காஞ்சிபுரம் திருக்கச்சி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்ததாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அந்த விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவர்களை விசாரித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அந்த விடுதியை பூட்டி சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.